கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கற்ற மாநிலமாக மாறிவிட்டது - அண்ணாமலை கண்டனம்
சென்னை, 12 மார்ச் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்த குற்றவாளிகளை விரைவில் கைது செய்யுமாறு தமிழக காவல்துறையை வலியுறுத்துகிறேன் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ
Annamalai


He


சென்னை, 12 மார்ச் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்த குற்றவாளிகளை விரைவில் கைது செய்யுமாறு தமிழக காவல்துறையை வலியுறுத்துகிறேன் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, 12 ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இந்த ஊழல் நிறைந்த மற்றும் திறமையற்ற திமுக அரசாங்கத்தின் கீழ், நம் பெண் குழந்தைகள் மற்றும் சகோதரிகள் அனுபவிக்கும் கொடூரமான சம்பவங்கள் குறித்து தினமும் செய்திகள் வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

கொடூரத்தால் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் குற்றவாளிகளை விரைவில் கைது செய்யுமாறு தமிழக காவல்துறையை வலியுறுத்துகிறேன்.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கற்ற மாநிலமாக மாறிவிட்டது. தமிழக மக்கள் இன்னும் சில நாட்களுக்கு இந்த சோதனையை அனுபவிக்க வேண்டும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ