Enter your Email Address to subscribe to our newsletters

நொய்டா,12 மார்ச் (ஹி.ச.)
நொய்டாவில் அமைந்திருக்கும் காவல் நிலையத்தின் முதல் செக்டார் எல்லைக்குள் இருக்கும் கேபிடல் பவர் சிஸ்டம்ஸ் லிமிடெட் தொழிற்சாலையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
இந்த பயங்கர தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பதற்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கேபிடல் பவர் சிஸ்டம்ஸ் லிமிடெட் மின்சார மீட்டர்களை உருவாக்கும் வேலையை செய்து வருகிறது.
சம்பவம் பற்றிய செய்தி கிடைத்ததும், கெளதம் புத் நகரின் தலைமை தீயணைப்பு அதிகாரி உட்பட தீயணைப்பு படை உடனே அந்த இடத்திற்கு விரைந்து வந்ததாக போலீஸ் ஜாயின்ட் கமிஷனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ராஜீவ் நாராயண் மிஸ்ரா சொன்னார்.
கூட்டு முயற்சியின் காரணத்தால், தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது.
இரவு நேர ஷிப்டில் வேலை செய்து கொண்டிருந்த கிட்டத்தட்ட 250 தொழிலாளர்கள் 30 தீயணைப்பு வண்டிகள் மற்றும் ஹைட்ராலிக் கருவிகளை வைத்து காப்பாற்றப்பட்டு, மருத்துவ உதவிக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மிஸ்ரா தெரிவித்தார்.
தீவிர புகையின் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்ட சில நபர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மிஸ்ரா,
தற்பொழுது தீ முழு கட்டுப்பாட்டில் உள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி முழுமையாக அளிக்கப்பட்டு வருகிறது. சுமார் 20-க்கும் மேற்பட்ட நபர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முதல் கட்ட தகவலின்படி, பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது, புகையின் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டவர்களில் சிலர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / JANAKI RAM