சென்னையில் ஒரே நாளில் மூன்று பாலியல் குற்றங்கள் - நயினார் நாகேந்திரன் கண்டனம்
சென்னை, 12 மார்ச் (ஹி.ச.) சென்னையில் ஒரே நாளில் மூன்று பாலியல் குற்றங்கள் நடந்துள்ளதாக திமுக அரசுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், விடிந்தால் ஒரு பாலியல் வன்கொடுமை செய்த
Nainar vs MKS


சென்னை, 12 மார்ச் (ஹி.ச.)

சென்னையில் ஒரே நாளில் மூன்று பாலியல் குற்றங்கள் நடந்துள்ளதாக திமுக அரசுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில்,

விடிந்தால் ஒரு பாலியல் வன்கொடுமை செய்தி வரும் விடியா திமுக ஆட்சியில், இன்று காலையிலேயே சென்னையில் மட்டும் 14 வயது பள்ளி மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை, ப்ராஜெக்ட் தொடர்பாக சென்னை வந்த கல்லூரி மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை, தையல் கடையில் 19 வயது பெண்ணுக்குப் பாலியல் தொல்லை என மூன்று செய்திகள் வந்திருக்கின்றன.

இந்தப் பதிவை எழுதும் போதே தமிழகத்தின் எந்த மூலையில், எந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகிறாரோ என யோசிக்கையில் ஈரக்குலை நடுங்குகிறது. தொடர்ந்து ஒரு வார காலமாக நடக்கும் கொடூரங்களே, கேடுகெட்ட @arivalayam ஆட்சியின் திறனற்ற நிர்வாகத்திற்கு சாட்சி!

எனவே, தமிழகத்தைப் பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக மாற்றிய திமுகவைத் துரத்தியடிப்போம்! தமிழக மகளிரைக் காப்போம் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN