Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 13 மார்ச் (ஹி.ச)
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு அதிகாரிகளுக்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறார் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
நேற்று, தமிழக உள்துறைச் செயலாளரை அழைத்து திமுக அரசு ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தச் செய்தது.
2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் குறித்து உள்துறைச் செயலாளர் வெளியிட்ட புள்ளிவிவரங்களை நாங்கள் நம்பவில்லை.
இதற்கான காரணம் என்னவென்றால், 2021 ஆம் ஆண்டில் NCRB-இன் (தேசிய குற்ற ஆவணக் காப்பகம்) தரவுகளின்படி பதிவான கொலை வழக்குகளின் எண்ணிக்கை 1,686 ஆகும்; ஆனால், 2021-இல் தமிழகத்தில் பதிவான கொலை வழக்குகளின் எண்ணிக்கை 1,597 மட்டுமே என்று உள்துறைச் செயலாளர் கூறுகிறார்.
2021-இல் தமிழக அரசே சமர்ப்பித்து, ஏற்கனவே வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களையே உங்களால் திரித்து வெளியிட முடிகிறது என்றால், இதுவரை வெளியிடாமல் நீங்கள் மறைத்து வைத்திருந்த 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான புள்ளிவிவரங்களை வேறு யார் தான் நம்புவார்கள்?
உள்துறை மற்றும் காவல்துறை ஆகிய துறைகளுக்குப் பொறுப்பான முதலமைச்சர், ஏன் அரசு அதிகாரிகளுக்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறார்? என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ