Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 13 மார்ச் (ஹி.ச.)
காங்கிரஸ் தொண்டர்கள் இன்று டெல்லியிலுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையகத்திற்கு வெளியே மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களுக்கு சமையல் எரிவாயுவை தடையின்றி வழங்குவதை உறுதி செய்ய மத்திய அரசு தவறிவிட்டதாகவும், அரசாங்கம் சூழ்நிலையின் தீவிரத்தை மறைத்து மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக, கட்சி ஊழியர்கள் ஒரு தற்காலிகமான பழைய கால அடுப்பை உருவாக்கி, அதில் தேநீர் தயாரித்து, அரசாங்கத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் எரிவாயு பற்றாக்குறையால் இல்லத்தரசிகள் சந்திக்கும் துன்பங்களை எடுத்துரைத்தனர்.
நாடு முழுவதிலும் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் எல்பிஜி சிலிண்டர்களை வாங்குவதற்கு திணறி வருவதாகவும், பழைய சமையல் முறைகளையே பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தொண்டர்கள் வேதனை தெரிவித்தனர்.
போராட்டம் தீவிரமடைந்ததால், டெல்லி காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பல தொண்டர்களை கைது செய்தனர்.
Hindusthan Samachar / JANAKI RAM