Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 14 மார்ச் (ஹி.ச.)
புதுடெல்லியில் உள்ள சுல்தான்புரி காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் ஒருவர், லஞ்சம் கேட்டதாக வந்த புகாரையடுத்து, நேற்று இரவு திடீர் சோதனை மேற்கொண்ட மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து, இந்த வழக்கில் அவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் மேலும் இரண்டு காவல் துறை அதிகாரிகள் தற்போது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
அந்த அதிகாரி ₹20,000 தொகையை லஞ்சமாக கேட்டபோது கையும் களவுமாக பிடிபட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
Hindusthan Samachar / JANAKI RAM