Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 16 மார்ச் (ஹி.ச.)
தூத்துக்குடியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த ஒரு குற்றவாளியைக் கூடதிமுக அரசு கைது செய்யவில்லை என்பது வெட்கக்கேடு என தமிழக பாஜக சார்பில் எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பாக அந்த பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகியும் திமுக அரசு ஒரு குற்றவாளியைக் கூட கைது செய்யவில்லை என்பது வெட்கக்கேடு.
முக.ஸ்டாலினின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குவதாலேயோ என்னமோ தமிழகக் காவல்துறையும் கையாலாகாதவர்களாகவே மாறிவிட்டனர் போலும்.
அதுசரி, திமுக அரசின் அவலங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் சமூக ஆர்வலர்களை எப்படி கண்டறியலாம், அவர்கள் மீது என்ன பொய்வழக்கு பதியலாம் என்பதிலேயே தமிழக அரசின் உளவுத்துறையும் காவல்துறையும் கவனம் செலுத்திக் கொண்டிருந்தால், பாலியல் குற்றவாளிகள் பாடு கொண்டாட்டம் தானே? இந்த லட்சணத்தில் இவர்களுக்கு “ஸ்காட்லாண்ட் யார்டு” என்ற புனைப்பெயர் ஒரு கேடு என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ