தேர்தல் நடத்தை விதிகள் அமல், 599 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை - சென்னை காவல்துறை தகவல்
சென்னை, 16 மார்ச் (ஹி.ச) தேர்தல் நடத்தை விதிகள் அமல், 599 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை என சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதேபோன்று ஒப்படைப்படாத 9 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆ
Pistol


சென்னை, 16 மார்ச் (ஹி.ச)

தேர்தல் நடத்தை விதிகள் அமல், 599 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை என சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அதேபோன்று ஒப்படைப்படாத 9 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. சென்னை காவல்துறைக்குட்படடு 24 தொகுதிகள் உள்ள நிலையில், தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது.

உரிமம்பெற்ற துப்பாக்கிகள் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

மொத்தமாக 2375 உரிமம்பெற்ற துப்பாக்கிகள் உள்ள நிலையில், இதுவரை 1191 உரிமம்பெற்ற துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 599 துப்பாக்கிகள் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை.

ஒப்படைப்படாத 9 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் விளையாட்டிற்காகவும், வங்கி பாதுகாப்பிற்காகவும் வைத்துள்ள 527 துப்பாக்கிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ