மேற்கு வங்கத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடிச் சோதனை
கொல்கத்தா, 16 மார்ச் (ஹி.ச.) மேற்கு வங்க மாநிலத்தில் சிலிகுரி, ஹவுரா, பிதான்நகர் மற்றும் துர்காபூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிகாலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோதமாக கால் சென்ட
மேற்கு வங்கத்தில் 10க்கும் மேற்பட்ட  இடங்களில்  அமலாக்கத்துறை அதிரடிச் சோதனை


கொல்கத்தா, 16 மார்ச் (ஹி.ச.)

மேற்கு வங்க மாநிலத்தில் சிலிகுரி, ஹவுரா, பிதான்நகர் மற்றும் துர்காபூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிகாலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோதமாக கால் சென்டர் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் நிலையில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்கள் மீது அமலாக்கத்துறையின் புலனாய்வுப் பிரிவினர் ஒரே நேரத்தில் இந்தச் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதிகாரிகளின் தகவலின்படி, இந்தச் சட்டவிரோதச் செயல்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் பல தனிநபர்களின் வளாகங்களில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சோதனைக்கு உள்படுத்தப்படுவர்களில் சுரஸ்ரீ கர், சாம்ராட் கோஷ் மற்றும் சுபாஜித் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் அடங்குவர்.

இந்தச் சட்டவிரோதச் செயல்பாடுகள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரிக்கவும், நிதிப் பரிவர்த்தனைகளைக் கண்டறியவும் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் பிற பொருள்கள் ஆய்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

Hindusthan Samachar / vidya.b