Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 16 மார்ச் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில்
2026-ம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ படைனரின் கொடி அணிவகுப்பு
சாத்தூர் டிஎஸ்பி குருசாமி தலைமையில் நடைபெற்றது.
சாத்தூர் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து துணை ராணுவ படையினர், ஆயுதப்படையினர், சிறப்பு காவல் படையினர் மற்றும் சாத்தூர் சரக போலீசாரின் கொடி அணி வகுப்பு மெயின்ரோடு வழியாக பள்ளிவாசல் தெரு வெள்ளக்கரை ரோடு மேல காந்தி நகர் அண்ணா நகர் பைபாஸ் ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் சாத்தூர் டி.எஸ்.பி அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இதில் வஜ்ரா வாகனம் உள்ளிட்ட காவல்துறை வாகனங்களுடன் சேர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் மற்றும் துணை ராணுவ படையினரும் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / Durai.J