Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 17 மார்ச் (ஹி.ச.)
மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா, முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரும், முன்னாள் கோவா முதலமைச்சருமான மனோகர் பாரிக்கரின் நினைவு நாளையொட்டி, இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது,
மனோகர் பாரிக்கர் ஜியின் நினைவு நாளில் அவருக்கு எனது அஞ்சலிகள். ஒரு தீவிர தேசபக்தராகவும், உள்ளத்தால் மிகவும் பணிவான மனிதராகவும் திகழ்ந்த பாரிக்கர் ஜியின் வாழ்க்கையும், நாட்டிற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளும் என்றென்றும் நினைவுகூரப்படும். ஒரு மக்கள் தலைவராக அவர் விட்டுச்சென்ற மரபு, வரும் தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.
என்று அமித்ஷா குறிப்பிட்டார்.
2014 முதல் 2017 வரை பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பணியாற்றியவரும், நான்கு முறை கோவா முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தவருமான மனோகர் பாரிக்கர், கணையப் புற்றுநோயுடன் போராடிய மார்ச் 17, 2019 அன்று காலமானார்.
Hindusthan Samachar / vidya.b