Enter your Email Address to subscribe to our newsletters

வதோதரா, 17 மார்ச் (ஹி.ச.)
குஜராத் சோமா தலாப் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இன்று பால்கனி இடிந்து விழுந்த சம்பவத்தில் சிக்கியிருந்த அனைத்து உள்ளூர் வாசிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில்,
கட்டிடத்தின் இடதுபுறத்தில் அமைந்திருந்த பால்கனியின் ஒரு பகுதி இடிந்து விழுந்து படிக்கட்டுப் பகுதிக்கு அருகில் தடையை உருவாக்கியது.
அதே நேரத்தில், சம்பவ இடத்தில் சிறிய அளவிலான தீ விபத்தும் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தீயணைப்பு அதிகாரி அமித் சௌத்ரி கூறியதாவது,
வதோதரா தீயணைப்பு மற்றும் அவசர சேவை மையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டன.
தரைத்தளம் மற்றும் மூன்று மாடிகள் கொண்ட இந்தக் கட்டிடத்தின் இடதுபுறத்தில் உள்ள பால்கனி இடிந்து விழுந்ததால், படிக்கட்டுப் பகுதியில் தடையுண்டாகி உள்ளே இருந்தவர்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.
மீட்புக் குழுவினர் விரைவாகச் செயல்பட்டு அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றினர். தற்போது கட்டிடம் முழுமையாக காலி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இச்சம்பவம் தொடர்பான கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / JANAKI RAM