விரிவாக்க பணிகள் காரணமாக சென்னை விமான நிலையத்தில் ஏப்ரல் 24-ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்
சென்னை, 17 மார்ச் (ஹி.ச.) சென்னை விமான நிலையத்தில் பேஸ் 2 மற்றும் டெர்மினல் 3 கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதனால், பயணிகள் மற்றும் வாகனங்களின் பாதுகாப்பு கருதி, விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றங்களை இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.
Traffic Diversions at Chennai Airport


சென்னை, 17 மார்ச் (ஹி.ச.)

சென்னை விமான நிலையத்தில் பேஸ் 2 மற்றும் டெர்மினல் 3 கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதனால், பயணிகள் மற்றும் வாகனங்களின் பாதுகாப்பு கருதி, விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றங்களை இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை விமான நிலையம் டெர்மினல் 4 அருகே தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

டெர்மினல் 4 அருகே உள்ள வாகனங்கள் உள்ளே வருவதற்கான டோல்கேட் மூடப்பட்டுள்ளது.

தாம்பரம் பகுதியில் இருந்து விமான நிலையத்துக்குள் வரும் அனைத்து வாகனங்களும் ஜிஎஸ்டி சாலை சர்வீஸ் சாலையை பயன்படுத்தி, டெர்மினல் 2 நுழைவு வாயில் டோல்கேட் வழியாக விமான நிலையத்துக்குள் வருவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

டெர்மினல் 4 புறப்பாடு பகுதியில் இருந்து வெளியேறும் வாகனங்கள், ஒரே ஒரு டோல் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு டிராபிக் மார்ஷல்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

டெர்மினல் 1, டெர்மினல் 2 வழியாக பயணிக்கும் பயணிகளுக்கு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

அவர்கள் வழக்கமான வழிகளை பயன்படுத்தலாம்.

பயணிகள் வசதிக்காக, டெர்மினல் 1, டெர்மினல் 4 இடையிலான வாக்கலேட்டர் வசதிகள் வழக்கம்போல் இயக்கப்படுகிறது.

இந்த ஏற்பாடுகள் அனைத்தும் வரும் ஏப்ரல் 24-ம் தேதி வரை 40 நாட்களுக்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b