Enter your Email Address to subscribe to our newsletters

டேராடூன், 17 மார்ச் (ஹி.ச.)
உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் ஹேமாவதி நந்தன் பஹுகுனாவின் நினைவு நாளை முன்னிட்டு, இன்று தனது இல்லத்தில் அமைந்த அவரது உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில், முதல்வர் தாமி பஹுகுனாவின் ஆளுமை மற்றும் பங்களிப்புகளை நினைவுகூர்ந்து, அவரை தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவராகவும் திறமையான நிர்வாகியாகவும் வர்ணித்தார்.
இது குறித்து முதலமைச்சர் தாமி தனது எக்ஸ் சமூக வலைத்தள கணக்கில் பதிவிட்டுள்ளதாவது,
சிறந்த சுதந்திரப் போராட்ட வீரரும், உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், இமயமலையின் மைந்தனும் ஆன ஹேமாவதி நந்தன் பஹுகுனாவின் நினைவு நாளில் எனது எண்ணற்ற வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.
உங்கள் போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையும், தேச சேவைக்காக நீங்கள் அர்ப்பணித்த உழைப்பும், சமூக சேவையில் எங்களை எப்போதும் ஊக்குவிக்கிறது.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM