தவெக-விலிருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார் திமுகவில் இணைந்தார்
சென்னை, 19 மார்ச் (ஹி.ச) சின்னத்திரை, வெள்ளித்திரை என நடிப்பில் மட்டும் இல்லாமல் அரசியல் பிரமுகராகவும் திகழும் ரஞ்சனா நாச்சியார் ராமநாதபுரம் சமஸ்தான ராஜா பாஸ்கர சேதுபதி பரம்பரையைச் சேர்ந்தவர். ''துப்பறிவாளன்'', ''இரும்புத்திரை'', ''நட
Ranjana Nachiyar


சென்னை, 19 மார்ச் (ஹி.ச)

சின்னத்திரை, வெள்ளித்திரை என நடிப்பில் மட்டும் இல்லாமல் அரசியல் பிரமுகராகவும் திகழும் ரஞ்சனா நாச்சியார் ராமநாதபுரம் சமஸ்தான ராஜா பாஸ்கர சேதுபதி பரம்பரையைச் சேர்ந்தவர். 'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை', 'நட்பே துணை' போன்ற படங்களில் நடித்தவர்.

இவர் கடந்த 2023ஆம் ஆண்டு சென்னை போரூர், கெருகம்பாக்கத்தில் பேருந்தில் தொங்கியபடி சென்ற மாணவர்களை அடித்து கீழே இறக்கிவிட்டதும், பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இதன் பின்னர் இவர் பிரபலமானார்.

இதற்கிடையே, ரஞ்சனா நாச்சியார் முதலில் பா.ஜ.க.வின் கலை, கலாச்சாரப் பிரிவு மாநில செயலாளராக பதவி வகித்தார். அதன்பின் மும்மொழிக் கொள்கை திணிப்பு, திராவிட வெறுப்பு, தமிழகம் புறக்கணிப்பு ஆகிய காரணங்களால் பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக கூறி விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார்.

த.வெ.க.வில் இணைந்து சில நாட்கள் பணியாற்றிய நிலையில், விஜய்-சங்கீதா விவாகரத்து தொடர்பாக விஜய் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார். தாய் மாமனாக இருப்பதற்கு முன், பெற்ற குழந்தைகளுக்கு தகப்பனாக இருப்பது முக்கியம் இல்லையா? திருமணத்துக்கு பின்பு நாமும் இப்படி வாழலாம் என்ற எண்ணம் தொண்டர்களுக்கு வராதா? என கூறியிருந்தார்.

இந்த நிலையில் ரஞ்சனா நாச்சியார் தவெக-விலிருந்து விலகி இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b