Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 02 மார்ச் (ஹி.ச.)
ஈரானின் முக்கியமான தலைவர் அயதுல்லா அலி காமேனி இறந்த பிறகு, மத்திய கிழக்கு நாடுகளில் பிரச்சினை அதிகமாகி உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் ஷியா முஸ்லிம் ஜமாஅத் அமைப்பினர் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
இதனால், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் போர் வந்தால் இந்தியாவில் கலவரம் வர வாய்ப்பு உள்ளது. எனவே ஈரானுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டங்களை கவனிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் டிஜிபி-களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
இதற்கு முன்பு, இது பற்றி கலந்து பேச பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு மந்திரி சபை கூட்டம் நேற்று நடந்தது.
பிரதமர் மோடி மதுரை பொதுக்கூட்டத்தை முடித்து டெல்லி சென்றதும் இரவு இந்த கூட்டம் ஆரம்பமானது.
இந்த கூட்டத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் போன்றோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் வளைகுடா நாடுகள், அமீரகத்தில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு பற்றி பேசப்பட்டது.
Hindusthan Samachar / JANAKI RAM