சேலத்தில் அரசுப்பேருந்து மோதி விபத்து - 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி!
சேலம், 20 மார்ச் (ஹி.ச.) கோவையிலிருந்து சேலம் நோக்கி பயணிகளுடன் இன்று (20.03.2026) அரசுப் பேருந்து சேலம் மாவட்டம் அரியானூர் பகுதியில் உள்ள உத்தமசோழபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்ட
4 Killed After Government Bus Hits Them in Salem


சேலம், 20 மார்ச் (ஹி.ச.)

கோவையிலிருந்து சேலம் நோக்கி பயணிகளுடன் இன்று (20.03.2026) அரசுப் பேருந்து சேலம் மாவட்டம் அரியானூர் பகுதியில் உள்ள உத்தமசோழபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கொண்டிருந்தது.

அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பைத் தாண்டி எதிர் திசையில் பாய்ந்தது.

அச்சமயத்தில் அங்கு வந்து கொண்டிருந்த(டெம்போ) மற்றும் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

இந்த பயங்கர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் ஒருவர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கொண்டலாம்பட்டி காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வைத்தனர்.

அதோடு இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தின் போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரின் மனதை பதைபதைக்க வைக்கிறது.

Hindusthan Samachar / vidya.b