Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 21 மார்ச் (ஹி.ச)
புதுடெல்லியில் நடைபெற்ற பாரத் மின்சார உச்சி மாநாடு 2026-ன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற இந்தியா-ஆப்பிரிக்கா கூட்டத்தில் மத்திய மின்சாரத் துறை அமைச்சர் மனோகர் லால் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது,
உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ள இந்தியாவும் ஆப்பிரிக்காவும், அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான வளர்ச்சி என்ற பொதுவான இலக்குகளைப் பகிர்ந்து கொள்கின்றன.
நம்பகமான மற்றும் மலிவு விலையில் மின்சாரம் கிடைப்பது பொருளாதார வளர்ச்சி, கண்ணியம் மற்றும் வாய்ப்புகளுக்கு மையமானது. மேலும், உலகளாவிய ஆற்றல் இணைப்பிற்கான ஒரு மாற்றியமைக்கும் பாதையாக “ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்கட்டமைப்பு” என்ற முன்முயற்சி வேண்டும்.
தொழில்நுட்ப நிபுணத்துவம், புதுமையான நிதி மற்றும் பொது-தனியார் கூட்டாண்மை ஆகியவை எவ்வாறு ஒரு மீள்திறன் கொண்ட உள்கட்டமைப்பை வழங்க முடியும் என்பதற்கு உதாரணமாக, கென்யா மின்பரிமாற்றத் திட்டம் உட்பட, ஆப்பிரிக்கா50 மற்றும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் இடையேயான ஒப்பந்தங்ககள் சான்றாக அமைக்கின்றன.
ஆப்பிரிக்காவின் எரிசக்தி மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதில் இந்தியா ஒரு நம்பகமான பங்காளியாகத் தொடர்கிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கம், ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மின்கட்டமைப்பு அமைப்புகளின் மேம்பாடு, எரிசக்தி சேமிப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மைக்கான தீர்வுகள், மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலம் திறன் மேம்பாடு ஆகியவற்றில் இரு தரப்பினரும் தங்கள் ஈடுபாட்டை அதிகரிப்பர்.
பொருளாதார மாற்றத்திற்கான ஒரு உந்துசக்தியாக எரிசக்தி அணுகல் பார்க்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b