Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா, 21 மார்ச் (ஹி.ச.)
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இன்று மத்திய கொல்கத்தாவின் ரெட் ரோடு பகுதியில் நடைபெற்ற ஈத்-உல்-பித்ர் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸின் முதன்மை நோக்கம் மாநிலத்தில் இருந்து பாஜகவை அகற்றுவதும், அக்கட்சியின் ஆதிக்கத்திலிருந்து நாட்டை காப்பதுமே என்றும் தெரிவித்தார்.
தியாக மனப்பான்மை இப்போது எங்கள் இதயங்களில் நிறைந்துள்ளது; கொடூரமானவர்களின் கைகளில் எவ்வளவு வலிமை இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
அல்லாஹ் உங்களை ஆசீர்வதிக்கட்டும். இந்தியாவும் வங்காளமும் செழித்தோங்கட்டும். உங்கள் சுயமரியாதையை உயர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும். எங்களுக்கு ஒரே ஒரு நோக்கம் மட்டுமே உள்ளது — அது பாஜகவை அகற்றுவதும் தேசத்தைக் காப்பதுமே ஆகும், என்று அவர் கூறினார்.
மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், மத்திய ஆளும் பாஜக மீது முதலமைச்சர் கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.
மேலும், குடிமக்கள் பதிவேடு தொடர்பான விவகாரம் குறித்து குறிப்பிட்ட அவர், அதற்கு எதிரான தனது போராட்டத்தை தொடருவதாகவும், மக்களின் உரிமைகளை பிரதமர் நரேந்திர மோடி பறிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்றும் உறுதியளித்தார்.
இதோடு, பாஜகவை குண்டர்கள் மற்றும் திருடர்களின் கட்சி என்று அவர் குற்றம்சாட்டினார்.
Hindusthan Samachar / JANAKI RAM