Enter your Email Address to subscribe to our newsletters

ஈரான், 21 மார்ச் (ஹி.ச.)
ஈரான் யுத்தத்தின் விளைவாக, ஹார்முஸ் நீர்ச்சந்தியை ஈரானின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்க அமெரிக்கா தனது நேச நாடான நேட்டோவிடம் உதவி கோரியது.
இருப்பினும் எந்த தேசமும் முழுமையான ஆதரவு தரவில்லை.
இந்நிலையில், ஈராக்கில் இருந்த பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி நாடுகளின் இராணுவ முகாம்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களின் காரணமாக அங்கு செயல்பட்டு வந்த நேட்டோ அமைப்பின் ஆலோசனைக்குழு நாட்டை விட்டு வெளியேறுவதாக அறிவித்தது.
நேட்டோவின் உயர்மட்ட தளபதி, நேற்றைய தினம் அதன் இறுதிப் படை வீரரும் வெளியேறிவிட்டதாக அறிவித்தார். அவர்கள் பத்திரமாக ஐரோப்பாவிற்கு மாற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த ஆலோசனைக்குழு ஒரு போர்சாரா அமைப்பாகும். இது ஈராக் அதிகாரிகளுக்கு நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவது, ராணுவத்தை வலுப்படுத்துவது போன்ற ஆலோசனைகளை வழங்கி வந்தது.
தற்போது, இந்த ஆலோசனைக் குழு இத்தாலியின் நோபிள் நகரிலுள்ள நேட்டோவின் தலைமை அலுவலகத்திலிருந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM