Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 22 மார்ச் (ஹி.ச.)
உலக நீர் தினத்தை முன்னிட்டு, பூமியின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் நீரின் அத்தியாவசியப் பங்கை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
நீரின் ஒவ்வொரு துளியையும் பாதுகாக்கும் நோக்கில், நாடு முழுவதும் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
இது குறித்து, ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,
நீர் மனித வாழ்வின் ஆதாரமாக மட்டுமல்ல, பூமியின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறது.
இந்த உலக நீர் தினத்தில், ஒவ்வொரு துளியையும் சேமித்து, பொறுப்புடன் பயன்படுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிசெய்வோம்.
என தெரிவித்துள்ளார்.
மேலும், நிலையான நீர் பயன்பாட்டு முறைகளை பின்பற்றுபவர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துபவர்கள் மற்றும் நீர் பாதுகாப்பு கலாச்சாரத்தை ஊக்குவிப்பவர்களை பாராட்டும் நாளாகவும் உலக நீர் தினம் அமைகிறது.
1993ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மார்ச் 22ஆம் தேதி அனுசரிக்கப்படும் உலக நீர் தினம், நன்னீரின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய விழிப்புணர்வு நாளாகும்.
2030ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை உறுதி செய்யும் நிலையான வளர்ச்சி இலக்கு 6 (SDG 6) அடைவதற்கு ஆதரவு வழங்குவதே இந்நாளின் பிரதான நோக்கமாகும்.
Hindusthan Samachar / JANAKI RAM