திருத்தணி முருகப்பெருமான் ஆலயத்திற்கு ஆட்டோக்கள் செல்ல கட்டுப்பாடு
திருத்தணி, 22 மார்ச் (ஹி.ச.) திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாது பக்கத்து மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் அதிகமான பக்தர்கள் வந்து இறைவனை வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதோடு, நாளை மற
திருத்தணி முருகப்பெருமான் ஆலயத்திற்கு ஆட்டோக்கள் செல்ல கட்டுப்பாடு


திருத்தணி, 22 மார்ச் (ஹி.ச.)

திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாது பக்கத்து மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் அதிகமான பக்தர்கள் வந்து இறைவனை வழிபட்டு செல்கின்றனர்.

இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதோடு, நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) முருகனுக்கு விசேஷமான நாளாக இருப்பதால், இந்த இரண்டு நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள் என்று கணிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, மலைக்கோவிலுக்கு ஆட்டோக்கள் செல்ல கோயில் நிர்வாகம் இரண்டு தினங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது.

இட நெருக்கடியை மனதில் கொண்டு, கார்கள் மட்டும் இயக்க அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், மலைக்கோவில் நுழைவுப் பகுதியில் இருந்து படா செட்டிகுளம் வரை பக்தர்கள் இலவசமாக கோயில் பஸ்களில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனங்களில் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி தரப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM