மேற்காசியா பதற்றம் எதிரொலி - இலங்கையில் எரிபொருள் விலை 25 சதவீதம் உயர்வு
கொழும்பு, 23 மார்ச் (ஹி.ச.) மேற்காசியாவில் நிலவி வரும் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கையில் எரிபொருள் விலை 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய திருத்தத்தின் படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.398 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு அது ரூ.317 ஆக
மேற்காசியா பதற்றம் எதிரொலி - இலங்கையில் எரிபொருள் விலை 25 சதவீதம் உயர்வு


கொழும்பு, 23 மார்ச் (ஹி.ச.)

மேற்காசியாவில் நிலவி வரும் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கையில் எரிபொருள் விலை 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய திருத்தத்தின் படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.398 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு அது ரூ.317 ஆக இருந்தது.

அதே போல், பொதுப் போக்குவரத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் டீசல் விலையும் ரூ.382 லிருந்து ரூ.79 உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரமே சுமார் 8 சதவீதம் விலை உயர்வு செய்யப்பட்ட நிலையில், இரு வாரங்களுக்குள் இரண்டாவது முறையாக இந்த உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களுக்கு இலங்கை பெருமளவில் சிங்கப்பூர், மலேசியா மற்றும் தென்கொரியாவை சார்ந்துள்ளது. மேலும், ஈரான் கட்டிய சுத்திகரிப்பு நிலையத்திற்குத் தேவையான கச்சா எண்ணெய் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது, காணப்படும் பதற்ற சூழலால் அதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

ஏற்கனவே பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வரும் இலங்கை, இந்த விலை உயர்வால் போக்குவரத்து கட்டணங்கள், மொத்த பணவீக்கம், வர்த்தகம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு அழுத்தங்களை சந்திக்க நேரிடும் எனக் கணிக்கப்படுகிறது.

Hindusthan Samachar / JANAKI RAM