தேர்தலை புறக்கணிக்கப் போவதாக குளத்துவேல்பட்டி கிராம மக்கள் அறிவிப்பு
காரைக்குடி, 23 மார்ச் (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சிறுகப்பட்டி ஊராட்சியில் 70 குடும்பங்கள் வசிக்கும் குளத்துவேல்பட்டி கிராமம் அருகே 2 மாதங்களுக்கு முன்பு தனியார் கோழிப் பண்ணை அமைக்கப்பட்டது. இந்தப் பண்ணையிலிருந்து ஏராளமான ஈக்
Kulathuvelpatti village announce


காரைக்குடி, 23 மார்ச் (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சிறுகப்பட்டி ஊராட்சியில் 70 குடும்பங்கள் வசிக்கும் குளத்துவேல்பட்டி கிராமம் அருகே 2 மாதங்களுக்கு முன்பு தனியார் கோழிப் பண்ணை அமைக்கப்பட்டது.

இந்தப் பண்ணையிலிருந்து ஏராளமான ஈக்கள் ஊருக்குள் பறந்து வருகின்றன. மேலும், அப்பகுதி முழுவதும் துர் நாற்றமும் வீசுகிறது. இதனால்9, அந்த கிராமமே கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது.

இதையடுத்து, சுகாதாரமற்ற முறையில் இயங்கும் அந்த கோழிப் பண்ணையை அகற்ற வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் தொடர்ந்து ஊரக வளர்ச்சி, வருவாய்த்துறை அதிகாரி களிடம் மனு அளித்தனர். ஆனால், நடவடிக்கை எடுக்க வில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள், வரும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கிராமத்தில் பேனர் வைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

கோழிப் பண்ணையிலிருந்து அதிகளவில் ஈக்கள் வருகின்றன.

அவை உணவுப் பொருட்களில் மொய்க்கின்றன. இதனால், நோய் பரவும் அபாயம் உள்ளது. துர்நாற்றம் கடுமையாக வீசுவதால், சுவாசிக்க முடிய வில்லை.

பண்ணையை அகற்ற பலமுறை மனு அளித்தும் நட வடிக்கை எடுக்கவில்லை. எனவே, தேர்தலை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Hindusthan Samachar / vidya.b