புதுச்சேரியில் கூட்டணி அமைத்த தமிழக வெற்றிக் கழகம்
சென்னை, 23 மார்ச் (ஹி.ச) புதுச்சேரி மாநிலத்தில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடக் கூடிய தமிழக வெற்றிக் கழகம், நேயம் மக்கள் கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ளதாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்
TVK Vijay


Je


சென்னை, 23 மார்ச் (ஹி.ச)

புதுச்சேரி மாநிலத்தில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடக் கூடிய தமிழக வெற்றிக் கழகம், நேயம் மக்கள் கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ளதாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

புதுச்சேரி மாநிலத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், புதுச்சேரி மாநில வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, நேயம் மக்கள் கழகம் நிறுவனத் தலைவர் நேரு (எ) குப்புசாமி MLA அவர்கள், தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்

அதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகள், கூட்டணியில் சேர்ந்துள்ள நேயம் மக்கள் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

இன்று புதுச்சேரியில் வேட்பாளர் மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் என்பதால்,நேற்று புதுச்சேரியில் த.வெ.க. சார்பில் 30 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தனர்.

இதில் உருளையன் பேட்டை தொகுதியில் மரிய பிரான்சிஸ், தட்டாஞ்சாவடி தொகுதியில் பன்னீர்செல்வமும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுருந்தது, அந்த வகையில் இவர்கள் இருவரும் வேட்பாளர் மனு தாக்கல் செய்யப்பட மாட்டார்கள் புதிதாக நியமிக்கப்படக்கூடிய கட்சியை சார்ந்த நிர்வாகிகள் வேட்பாளர் மனு தாக்கல் செய்யப்பட உள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ