டெல்லி ஜண்டேவாலன் கோவிலருகே பேருந்து கவிழ்ந்து 2 பேர் பலி - பலர் காயம்!
புதுடெல்லி, 25 மார்ச் (ஹி.ச.) டெல்லி கரோல் பாக் பகுதியில் உள்ள ஜண்டேவாலன் கோவிலருகே நேற்று நள்ளிரவில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர். டெல்லி தீயணைப்புத் துறையினரின் தகவலின்படி, ஹனுமான் மந்திர்
டெல்லி ஜண்டேவாலன் கோவிலருகே பேருந்து கவிழ்ந்து 2 பேர் பலி, பலர் காயம்


புதுடெல்லி, 25 மார்ச் (ஹி.ச.)

டெல்லி கரோல் பாக் பகுதியில் உள்ள ஜண்டேவாலன் கோவிலருகே நேற்று நள்ளிரவில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.

டெல்லி தீயணைப்புத் துறையினரின் தகவலின்படி, ஹனுமான் மந்திர் சந்திப்பிற்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

நள்ளிரவு 1.08 மணியளவில் அவசர அழைப்பு பெறப்பட்டதையடுத்து, மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

ராஜஸ்தானிலிருந்து வந்துகொண்டிருந்ததாக கூறப்படும் பேருந்தில் விபத்து நேரத்தில் சுமார் 25 பயணிகள் இருந்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காயமடைந்தவர்களில் குறைந்தது இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து, விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / JANAKI RAM