வேலைப்பளுவை குறைப்பதற்கு மெட்டா நிறுவன முதன்மை செயல் அதிகாரி எடுத்த அதிரடியான முடிவு!
சென்னை, 25 மார்ச் (ஹி.ச.) மெட்டா நிறுவனத்தினுடைய முதன்மை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பர்க், தன்னுடைய வேலைச்சுமையை குறைப்பதற்கும், நிறுவனத்தை மிகச்சிறப்பாக நிர்வகிப்பதற்கும் ஒரு பிரத்தியேகமான ஏஐ பிரதிநிதியை உருவாக்கி வருவதாக செய்தி வெளிவந்துள்ளது.
வேலைப்பளுவை குறைப்பதற்கு மெட்டா நிறுவன முதன்மை செயல் அதிகாரி எடுத்த அதிரடியான முடிவு!


சென்னை, 25 மார்ச் (ஹி.ச.)

மெட்டா நிறுவனத்தினுடைய முதன்மை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பர்க், தன்னுடைய வேலைச்சுமையை குறைப்பதற்கும், நிறுவனத்தை மிகச்சிறப்பாக நிர்வகிப்பதற்கும் ஒரு பிரத்தியேகமான ஏஐ பிரதிநிதியை உருவாக்கி வருவதாக செய்தி வெளிவந்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் உலகம் முழுவதுமுள்ள அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற முக்கியமான நிறுவனங்கள் பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

பெரிய நிறுவனங்கள் அவர்களுடைய வாடிக்கையாளர்களின் புகார்களைத் தீர்ப்பது உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் மனிதர்களுக்கு பதிலாக ஏஐ பிரதிநிதிகளை பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றன.

இந்நிலையில், பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தினுடைய முதன்மை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பர்க் தன்னுடைய வேலைகளுக்கு உதவி செய்வதற்காக ஒரு செயற்கை நுண்ணறிவு பிரதிநிதியை உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது.

பொதுவாக ஒரு நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிக்கு ஏதாவது தகவல் தேவைப்பட்டால், அவர் பல நிலைகளில் இருக்கின்ற அதிகாரிகளிடம் கேட்டு பெற வேண்டியிருக்கும். ஆனால், இந்த ஏஐ பிரதிநிதி வாயிலாக ஜுக்கர்பெர்க் தனக்கு தேவையான விவரங்களை மிக துரிதமாக பெறுவதற்கு திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

எதிர்காலத்தில் நிறுவனத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கின்ற ஒவ்வொரு நபருக்கும் ஒரு தனிப்பட்ட 'ஏஐ பிரதிநிதி' இருக்க வேண்டும் என்று ஜுக்கர்பர்க் ஏற்கனவே கூறியிருந்தார்.

அதை அவரிடத்திலிருந்தே அவர் ஆரம்பித்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

Hindusthan Samachar / JANAKI RAM