Enter your Email Address to subscribe to our newsletters

பியாங்யாங், 25 மார்ச் (ஹி.ச.)
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் மூன்றாவது முறையாக பதவியேற்றதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தென்கொரியாவை வடகொரியாவின் மிகப்பெரிய எதிரி நாடாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
மேலும், இருநாடுகளும் அமைதியான முறையில் ஒன்றிணையலாம் என்ற கொள்கைக்கு எதிராக அரசியலமைப்பில் முக்கிய திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.
அதோடு, வடகொரியாவின் அணு ஆயுத அந்தஸ்தை எந்த சூழலிலும் கைவிட முடியாது என அவர் எச்சரித்தார்.
அணு ஆயுதங்களை ஒழிக்க அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM