Enter your Email Address to subscribe to our newsletters

அயோத்தி, 27 மார்ச் (ஹி.ச.)
ராம நவமி திருவிழாவையொட்டி, அயோத்தியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று பெரும் கூட்டமாக திரண்டனர்.
தொலைதூர பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் உற்சாகத்துடன் சமயச் சடங்குகளில் பங்கேற்றனர்.
புனித நீராடிய பின்னர், அவர்கள் ராமாலயம் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் சென்று பிரார்த்தனைகள் செய்தனர். நகரம் முழுவதும் ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்கள் பரவியது, பக்தர்களிடையே ஆன்மீக பரவசம் நிலவியது.
ஒன்பது நாள் நீடிக்கும் 'ராம நவராத்திரி' திருவிழா இன்று ராமரின் பிறந்தநாளான ராம நவமி உடன் நிறைவு அடைகிறது.
இந்தத் திருவிழா, அன்னை சக்தியின் ஒன்பது அவதாரங்களை போற்றும் சடங்குகளுடன், இந்தியா முழுவதும் பக்தியுடன் கொண்டாடப்படுகிறது.
இது தொடர்பாக,நகராட்சி ஆணையர் தெரிவித்ததாவது,
மாவட்ட நிர்வாகம் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
முக்கிய இடங்களில் காவல்துறை செயல்பாடுகள் தீவிரமாக இருக்கிறது.
குடிநீர், சுகாதாரம் மற்றும் தூய்மை வசதிகள் முறையாகச் செயல்பட்டு, பக்தர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படவில்லை.
மேலும், சூரிய திலகம் சடங்கு மிகுந்த பாராட்டைப் பெற்றது.
அயோத்தி துறவிகள், இத்தகைய பிரம்மாண்ட காட்சியை உலகின் வேறு எங்கும் காண முடியாது எனக் கூறினார்.
Hindusthan Samachar / JANAKI RAM