உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பிரதமர் மோடியுடன் சந்திப்பு
புதுடெல்லி, 27 மார்ச் (ஹி.ச.) உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி இன்று புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது, மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சி முன்னெடுப்புகள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறி
Uttarakhand CM Dhami meets PM Modi


புதுடெல்லி, 27 மார்ச் (ஹி.ச.)

உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி இன்று புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

அப்போது, மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சி முன்னெடுப்புகள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இந்த சந்திப்பின் போது, மத்திய அரசின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுக்காக பிரதமருக்கு தாமி நன்றி தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசின் உதவியுடன் உத்தரகாண்ட் வளர்ச்சியில் புதிய மைல்கற்களை எட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து உத்தரகாண்ட் முதலமைச்சர் அலுவலகம் (சிஎம்ஓ) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

ஹரித்வாரில் நடைபெறும் கும்பமேளா 2027-க்கு ₹500 கோடி நிதியுதவி, மற்றும் ரிஷிகேஷில் நிலத்தடி மின் கேபிளிங், சம்பாவத் புறவழிச்சாலை, டேராடூன் சுற்றுச்சாலை, டேராடூன்-முசோரி சாலை போன்ற திட்டங்களுக்கான ஒப்புதல்கள் உள்ளிட்ட நிதி மற்றும் கொள்கை ஆதரவிற்காக தாமி மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

மாநிலத்தின் வளர்ச்சி தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்த முதலமைச்சர், ரிஷிகேஷ், டேராடூன், ராம்நகர் மற்றும் திரியுகிநாராயண் போன்ற இடங்கள் பிரபலமடைந்து வருவதால், உத்தரகாண்டை ஒரு உலகளாவிய திருமண இடமாக மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் மோடியிடம் கூறினார்.

பெல் கேதார், அஞ்சனிசைன்-திஹ்ரி மற்றும் லோகாகாட்-ஷியாம்லத்லால் போன்ற பகுதிகளில் ஆன்மீகப் பொருளாதார மண்டலங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

ஆதி கைலாஷ் யாத்திரையின் விரிவாக்கம் உள்ளிட்ட சுற்றுலா முயற்சிகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளன, மேலும் சமீபத்திய ஆண்டுகளில் யாத்ரீகர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

ஆற்றுப் படகுப் பயணம், பாராகிளைடிங் மற்றும் கயாக்கிங் போன்ற சாகச சுற்றுலா நடவடிக்கைகளும் தீவிரமாக ஊக்குவிக்கப்படுகின்றன.

உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் என்ற முன்னெடுப்பின் கீழ், வேலைவாய்ப்பையும் கிராமப்புறப் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில், உள்ளூர் தயாரிப்புகள் 'ஹவுஸ் ஆஃப் ஹிமாலயாஸ்' பிராண்ட் மூலம் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் சந்தைப்படுத்தப்படுகின்றன.

மீரட்டிலிருந்து ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் வரை மண்டல விரைவுப் போக்குவரத்து அமைப்பை (RRTS) நீட்டிப்பது; ரிஷிகேஷ்-கர்ணபிரயாக் ரயில் திட்டத்தை விரைவாக முடிப்பது உள்ளிட்ட போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு வலையமைப்புகளை விரிவுபடுத்துவதற்கு தாமி மத்திய அரசின் ஆதரவைக் கோரினார்.

ரிஷிகேஷ்-உத்தர்காஷி மற்றும் பாகேஷ்வர்-கர்ணபிரயாக் போன்ற புதிய ரயில் இணைப்புகளை அமைத்தல்; மற்றும் ஹரித்வார்-டேராடூன் ரயில் பாதையை இரட்டைப் பாதையாக விரிவுபடுத்துதல்.

உத்தராகண்டில் ஒரு பாதுகாப்பு உற்பத்தி மையத்தை உருவாக்குவதற்கும் அவர் முன்மொழிந்தார்; மேலும் கோத்வார், ஹரித்வார் மற்றும் டேராடூன் ஆகிய இடங்களில் பாதுகாப்பு உபகரண உற்பத்தி அலகுகளை நிறுவுவதற்குத் தேவையான கொள்கை ரீதியான ஆதரவையும் அவர் கோரினார்.

டெல்லி-ஹல்த்வானி விரைவுச்சாலை, சின்யாலிசௌர் விமான ஓடுதளத்தின் விரிவாக்கம், ரைவாலா பகுதியில் ஒரு பாலம் அமைத்தல் மற்றும் டெஹ்ரி ஏரியில் கடல் விமானச் சேவைகளைத் தொடங்குதல் ஆகியவை கூடுதல் முன்மொழிவுகளில் அடங்கும்.

மேலும் ராம நவமி பண்டிகையையொட்டி, பிரதமர் அவர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த தாமி, பாரம்பரியப் பரிசுகளையும் வழங்கினார். இவற்றுள், 'மா சுர்கண்டா தேவி'யின் மாதிரி வடிவம், 'பத்ரி' பசுவின் பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட நெய், மற்றும் அம்மாநிலத்திலேயே விளைந்த 'ராஜ்மா' (கிட்னி பீன்ஸ்) மற்றும் தேன் ஆகியவை அடங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b