கள்ளக்காதலை தட்டிக் கேட்டதால் ஆத்திரம் - கணவனை கொன்று புதைத்த மனைவி
ஆந்திரா, 28 மார்ச் (ஹி.ச.) ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் ஹனிமிரெட்டிபள்ளியைச் சேர்ந்தவர் ஹனுமந்தராயுடு (வயது 43). இவருடைய மனைவி சுகன்யா. தம்பதிக்கு சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அம்ருதா என்ற மகளும், சந்தீப் என்ற மகனும் உள
கொலை


ஆந்திரா, 28 மார்ச் (ஹி.ச.)

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் ஹனிமிரெட்டிபள்ளியைச் சேர்ந்தவர் ஹனுமந்தராயுடு (வயது 43). இவருடைய மனைவி சுகன்யா.

தம்பதிக்கு சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

அம்ருதா என்ற மகளும், சந்தீப் என்ற மகனும் உள்ளனர். அவர்கள் சுமார் 15 ஆண்டுகளாக கல்யாணதுர்கம் மண்டலத்திலுள்ள பழைய குளத்தில் வசித்து, ஆடுகளை மேய்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், சுகன்யாவுக்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. 3 மாதங்களுக்கு முன்பு, அவரது கணவர் ஹனுமந்தராயுடு கள்ளத்தொடர்வை கைவிடுமாறு கூறினார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சுகன்யா ஒரு பாறாங்கல்லால் கணவரை தாக்கினார். இதில் அவர் இறந்து விட்டார்.

கணவர் உடலை வீட்டின் பின்புறத்தில் சுகன்யா புதைத்தார். இடைநிலைப் பள்ளி படித்து வரும் அவரது மகள் அம்ருதா இதனை கண்டு பிடித்தார். யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவதாக தாய் மிரட்டியதால், அவள் அமைதியாக இருந்தாள்.

இந்த நிலையில், நேற்று தாய்க்கும் மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சுகன்யா தன் மகள் அம்ருதாவைக் கொல்ல முயன்றார்.

அம்ருதா தப்பித்து ஓடிவிட்டாள். அவள் தன் தந்தையின் சொந்த ஊரான ஹனிமிரெட்டிபள்ளிக்குச் சென்று, தன் உறவினர்களிடம் நடந்ததைப் பற்றிக் கூறினாள்.

இதற்கிடையே சுகன்யா, கல்யாணதுர்கம் கிராமப்புற போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து சுகன்யாவிடம் விசாரணை நடத்தினர்.

புதைக்கப்பட்ட அவரது கணவர் உடலை தோண்டி எடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Hindusthan Samachar / GOKILA arumugam