மேற்கு ஆசியாவில் அதிக அபாயம் உள்ள மோதல் பகுதிகளில் விமானச் சேவைகள் நிறுத்தப்படவேண்டும் – இந்திய விமானிகள் சங்கம் கோரிக்கை
புதுடெல்லி, 28 மார்ச் (ஹி.ச.) இந்திய விமானிகள் சங்கம் (ஏஎல்பிஏ) இன்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்தை (டிஜிசிஏ), மேற்கு ஆசியாவில் அடையாளம் காணப்படும் அதிக அபாயம் உள்ள மோதல் மண்டலங்களில் விமானச் சேவைகளை நிறுத்தவும், செல்லுபடியாகும் காப்பீ
மேற்கு ஆசியாவில் அதிக அபாயம் உள்ள மோதல் பகுதிகளில்  விமானச் சேவைகள் நிறுத்தப்படவேண்டும் – இந்திய விமானிகள் சங்கம் கோரிக்கை


புதுடெல்லி, 28 மார்ச் (ஹி.ச.)

இந்திய விமானிகள் சங்கம் (ஏஎல்பிஏ) இன்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்தை (டிஜிசிஏ), மேற்கு ஆசியாவில் அடையாளம் காணப்படும் அதிக அபாயம் உள்ள மோதல் மண்டலங்களில் விமானச் சேவைகளை நிறுத்தவும், செல்லுபடியாகும் காப்பீட்டு தொகையை வெளிப்படுத்தி சரிபார்ப்பதை கட்டாயமாக்குமாறு கோரியுள்ளது.

டிஜிசிஏ-விற்கு எழுதிய கடிதத்தில், ஏஎல்பிஏ கடந்த கால போர்க் குழப்பங்களில் சிவில் விமான நிறுவனங்கள் எதிர்கொண்ட அபாயங்களை சுட்டிக்காட்டி, மோதல் பாதித்த பகுதிகளில் விமான சேவைகளை நடத்தியால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துரைத்தது.

செயலில் உள்ள மோதல்கள் நிலவும் பகுதிகளில் தேவையான உளவுத் தகவல்கள் வணிக விமான நிறுவனங்களுக்கு கிடைக்கவில்லை என்றும், விமானிகள் மற்றும் பணியாளர்களுக்குத் போதுமான போர் இடர் காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஏஎல்பிஏ, மேற்கு ஆசியாவில் செயல்படும் ஏர் இந்தியா நிறுவனத்தின் நடவடிக்கைகள் மற்றும் மோதல் நிறைந்த பகுதிகளில் விமான சேவைகள் தொடர்பான கட்டாய உத்தரவுகளைப் பற்றி முழுமையான விசாரணை நடத்துமாறு டிஜிசிஏ-விடம் கோரியுள்ளது.

மேற்கு ஆசியாவில் மோதல்கள், பிப்ரவரி 28 அன்று ஈரானில் இஸ்ரேல்-அமெரிக்கா நடத்திய தாக்குதலுடன் தொடங்கின. அதன்பின் ஈரான் பதிலடி கொடுத்ததால் மோதலின் தாக்கம் விரிந்து, பிராந்தியத்தின் அண்டை நாடுகளையும் பாதித்தது.

இதன் காரணமாக வான்வெளி சேவைகள் பாதிக்கப்பட்டு, பல விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டு, தாமதங்களையும் சந்தித்தன.

Hindusthan Samachar / JANAKI RAM