Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 28 மார்ச் (ஹி.ச.)
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையை பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார்.
மார்ச் 30ஆம் தேதி நடைபெறவுள்ள ‘Mera Booth Sabse Mazboot Samvaad - Puducherry’ (எனது வாக்குச்சாவடி - மிக வலிமையான உரையாடல்) நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க உள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் “இரட்டை என்ஜின்” ஆட்சி மூலம் வாக்காளர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில்,
கடந்த ஐந்து ஆண்டுகளில் என்டிஏ-வின் இரட்டை என்ஜின் அரசு புதுச்சேரி மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளது.
இதனால், மக்கள் மீண்டும் என்டிஏ-க்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
மார்ச் 30ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெறும் ‘Mera Booth Sabse Mazboot Samvaad - Puducherry’ நிகழ்வில் கலந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.
என்று குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM