நொய்டாவில் புதிய சர்வதேச விமான நிலையம் -பிரதமர் மோடி ஆய்வு
கௌதம் புத்தா நகர், 28 மார்ச் (ஹி.ச.) உத்தரப்பிரதேச மாநிலம் ஜெவாரில் உருவாக்கப்பட்டுள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் முதற்கட்டத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். சுமார் ரூ.11,200 கோடி முதலீட்டில், பொது-தனியார் கூட்டாண்மை (PPP) முறையி
உத்தரப்பிரதேச ஜெவாரில் உள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி ஆய்வு


கௌதம் புத்தா நகர், 28 மார்ச் (ஹி.ச.)

உத்தரப்பிரதேச மாநிலம்

ஜெவாரில் உருவாக்கப்பட்டுள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் முதற்கட்டத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

சுமார் ரூ.11,200 கோடி முதலீட்டில், பொது-தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் இந்த கட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,

தேசிய தலைநகர் பகுதிக்கான (என்சிஆர்) முக்கிய சர்வதேச நுழைவாயிலாக இந்த விமான நிலையம் அமையும் என்றும், நாட்டின் விமான நிலைய உள்கட்டமைப்பை வலுப்படுத்தி, சர்வதேச இணைப்புகளை மேம்படுத்தும் முக்கிய கட்டமாக இருக்கும்.

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்குத் துணையாக, டெல்லி என்சிஆர் பகுதிக்கான இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக நொய்டா சர்வதேச விமான நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இரண்டு விமான நிலையங்களும் ஒருங்கிணைந்த விமானப் போக்குவரத்து அமைப்பாக செயல்பட்டு, நெரிசலைக் குறைத்து, பயணிகள் சேவை திறனை அதிகரித்து, டெல்லி தேசிய தலைநகர் பகுதியை உலகின் முன்னணி விமானப் போக்குவரத்து மையங்களில் ஒன்றாக உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விமான நிலையம், இந்தியாவின் மிகப்பெரிய புதிய விமான நிலையத் திட்டங்களில் ஒன்றாகும். ஆரம்ப கட்டத்தில் ஆண்டுக்கு 1.2 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக இருக்கும்.

முழுமையாக மேம்படுத்தப்பட்ட பின், இந்த திறன் ஆண்டுக்கு 7 கோடி பயணிகள் வரை உயர்த்தப்படலாம்.

மேலும், 3,900 மீட்டர் நீளமுடைய ஓடுபாதை, அனைத்து காலநிலைகளிலும் 24 மணி நேர சேவையை ஆதரிக்கும் இன்ஸ்ட்ரூமென்ட் லேண்டிங் சிஸ்டம் (ILS) உள்ளிட்ட நவீன வழிசெலுத்தல் வசதிகள், மேம்பட்ட விமானத்தள விளக்குகள் ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன.

அதே போல், ஒருங்கிணைந்த சரக்கு நிலையம் மற்றும் தளவாட மண்டலங்களுடன் கூடிய பல்முக சரக்கு மையமும் இவ்விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சரக்கு மையம் ஆண்டுக்கு 2.5 லட்சம் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், அதை 18 லட்சம் மெட்ரிக் டன் வரை விரிவுபடுத்தும் வசதியும் உள்ளது.

மேலும், 40 ஏக்கர் பரப்பளவில் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் முழுமையான சீரமைப்பு (MRO) வசதியும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM