ஏப்ரல் 1 முதல் 900 அத்தியாவசிய மருந்துகள் விலை உயர்வு - தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம்
புதுடெல்லி, 28 மார்ச் (ஹி.ச.) அடுத்த மாதம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பாராசிட்டமால், ஆன்டிபயாட்டிக் உள்ளிட்ட 900 அத்தியாவசிய மருந்துகளின் விலை உயரும் என தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் அறிவ
Prices of 900 Essential Medicines to Rise


புதுடெல்லி, 28 மார்ச் (ஹி.ச.)

அடுத்த மாதம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பாராசிட்டமால், ஆன்டிபயாட்டிக் உள்ளிட்ட 900 அத்தியாவசிய மருந்துகளின் விலை உயரும் என தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது.

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் அறிவிப்பின்படி, இந்த உயர்வு சுமார் 0.65% ஆக இருக்கும். மூலப்பொருட்கள் மற்றும் பேக்கேஜிங் செலவு அதிகரித்துள்ளதே இதற்கு முக்கியக் காரணம் என கூறப்படுகிறது.

இது குறித்து இந்திய மருந்துத் தொழில் கூட்டமைப்பு ஆலோசகர் வினோத் கலானி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கடந்த 2022-ஆம் ஆண்டு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு விலை உயர்வு மிக குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

வலி நிவாரணிகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உள்ளிட்ட சுமார் 900 அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு ஏப்ரல் 1 முதல் 0.65% ஆக இருக்கும் என்றும், அதிகபட்ச சில்லறை விலையை அதிகரிக்க உற்பத்தியாளருக்கு அரசின் முன் அனுமதி தேவையில்லை.

விலை உயர்வைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த விலை உயர்வு 2022 ஆம் ஆண்டு ஒப்பிடுகையில் மிகக் குறைவாகவே உள்ளது.

மேலும், மேற்காசிய மோதல்களின் தாக்கங்களை கையாளுவதற்காக ஏழு அதிகாரம் அளிக்கப்பட்ட குழுக்களை அமைத்த பிரதமர் நரேந்திர மோடி, இந்த நெருக்கடிகளைத் தடுப்பதற்காக டீம் இந்தியா' அணுகுமுறையில் ஒன்றிய அரசுடன் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b