ஜம்முவில் முதல் மாரத்தான் - மக்கள் உற்சாக ஓட்டம்!
ஜம்மு, 29 மார்ச் (ஹி.ச.) ஜம்மு-காஷ்மீரில் முதல் முறையாக நடத்தப்பட்ட ஜம்மு மாரத்தான் போட்டியை, முதல்வர் உமர் அப்துல்லா இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் உடற்பயிற்சி முன்னோடிகள் மிலிந்த் சோமன் மற்றும் குல் பனாக் இணைந்து பங்கேற்றனர
ஜம்முவில் முதல் மாரத்தான் - மக்கள் உற்சாக ஓட்டம்!


ஜம்மு, 29 மார்ச் (ஹி.ச.)

ஜம்மு-காஷ்மீரில் முதல் முறையாக நடத்தப்பட்ட ஜம்மு மாரத்தான் போட்டியை, முதல்வர் உமர் அப்துல்லா இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் உடற்பயிற்சி முன்னோடிகள் மிலிந்த் சோமன் மற்றும் குல் பனாக் இணைந்து பங்கேற்றனர்.

மௌலானா ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த மாரத்தான், மழையைப் பொருட்படுத்தாத மக்கள் ஆர்வமிகு பங்கேற்பால் சிறப்புற்றது.

உடல்நல விழிப்புணர்வு மற்றும் சமூக ஒற்றுமையை ஊக்குவிப்பதுடன், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான வலுவான செய்தியையும் இந்த நிகழ்வு எடுத்துரைத்தது.

நிகழ்வில் கலந்து கொண்ட மிலிந்த் சோமன், ஜம்மு-காஷ்மீரில் இத்தகைய முயற்சி ஒரு முக்கிய முன்னேற்றமாகும் என்று தெரிவித்தார்.

மேலும், ஒருவர் போதிப்பதை அவர் தாமே கடைப்பிடிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்.

பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களும் இதே கருத்தை பகிர்ந்தனர்.

இந்த மாரத்தான், அமைதி, சகோதரத்துவம் மற்றும் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கில் ஒரு நேர்மறையான முன்னெடுப்பாக அவர்கள் பாராட்டினர்.

Hindusthan Samachar / JANAKI RAM