கும்பகோணத்தில் ‘கலர்ஸ் ஹெல்த் கேர்’ புதிய கிளை - நடிகை வாணி போஜன் திறந்து வைத்தார்
கும்பகோணம், 29 மார்ச் (ஹி.ச.) வெல்நஸ் மற்றும் ஹெல்த் கேர் நிறுவனமான கலர்ஸ் ஹெல்த் கேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் தனது சேவைகளை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக கும்பகோணத்தில் புதிய கிளையை தொடங்கியுள்ளது. ரயில்வே ஸ்டேஷன் ச
பி


கும்பகோணம், 29 மார்ச் (ஹி.ச.)

வெல்நஸ் மற்றும் ஹெல்த் கேர் நிறுவனமான கலர்ஸ் ஹெல்த் கேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் தனது சேவைகளை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக கும்பகோணத்தில் புதிய கிளையை தொடங்கியுள்ளது.

ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள பிரீமியர் அவியன் காம்ப்ளெக்ஸில் அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன “Kolors 2.0” வெல்நஸ் சென்டர் நடிகை வாணி போஜன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய வாணி போஜன்,

இன்றைய வாழ்க்கை முறையில் ஆரோக்கியமும் அழகும் இரண்டும் சமமாக முக்கியம் எனக் குறிப்பிட்டார்.

உடல் எடை அதிகரிப்பு, சரும பிரச்சினைகள், முடி உதிர்வு போன்ற சிக்கல்களுக்கு கலர்ஸ் ஹெல்த் கேர் வழங்கும் சேவைகள் மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும்.

கும்பகோணம் போன்ற வளர்ந்து வரும் நகரத்தில் இத்தகைய மையம் தொடங்கப்படுவது மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் டாக்டர் விஜய் கிருஷ்ணா பேசியதாவது,

கடந்த இருபது ஆண்டுகளாக ஹெல்த் கேர் துறையில் மக்கள் நம்பிக்கையை பெற்றுள்ளோம்.

US-FDA அங்கீகரிக்கப்பட்ட நவீன தொழில்நுட்பத்தின் மூலம் உடல் எடை குறைப்பு, சருமம் மற்றும் முடி தொடர்பான பிரச்சினைகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

உடல் எடை குறைப்பதன் மூலம் சுமார் 90 வகையான உடல்நல பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கலாம் என்றும் கூறினார்.

எக்சிக்யூட்டிவ் டைரக்டர் வெங்கட சிவாஜி கூனா கூறியது,

தெலுங்கு மாநிலங்களில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கிய பின்னர் தற்போது நாடு முழுவதும் சேவைகளை விரிவுபடுத்தி வருகிறோம்.

ஹைதராபாத், சென்னை போன்ற நகரங்களில் வழங்கப்பட்டுவரும் சேவைகள் இப்போது கும்பகோண மக்களுக்கும் கிடைக்கும்.

நிபுணர்களின் மேற்பார்வையில் சர்வதேச தரத்திலான வெயிட் லாஸ், ஸ்கின் கேர் மற்றும் ஹேர் ட்ரீட்மெண்ட் சேவைகள் வழங்கப்படும் என்றார்.

ஆபரேஷன்ஸ் டைரக்டர் கிருஷ்ணம் ராஜு தெரிவித்ததாவது,

ஆரோக்கியமும் அழகும் இணையும் சிறந்த வெல்நஸ் மையமாக Kolors-ஐ உருவாக்குவது நிறுவனத்தின் நோக்கம்.

நாடு முழுவதும் 54 -வது கிளை தொடங்கப்பட்டிருப்பது பெருமைக்குரிய விஷயம் என்றும் கூறினார்.

இந்த நிகழ்ச்சி 5M மீடியா ஒருங்கிணைப்பில் ஜெய்தீப் மேற்பார்வையில் நடைபெற்றது.

இதில் ரசிகர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / Durai.J