பிராமண வாக்குகள் மீது கவனம் செலுத்த வேண்டும் - நடிகை கஸ்தூரி
சென்னை, 30 மார்ச் (ஹி.ச) தமிழக அரசியலில் வாக்கு வங்கிகள் குறித்து நடிகை கஸ்தூரி வெளியிட்ட கருத்து புதிய அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, கடுமையான போட்டி நிலவும் தொகுதிகளில் அதிமுக
Kasthoori


Jd


சென்னை, 30 மார்ச் (ஹி.ச)

தமிழக அரசியலில் வாக்கு வங்கிகள் குறித்து நடிகை கஸ்தூரி வெளியிட்ட கருத்து புதிய அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

கடுமையான போட்டி நிலவும் தொகுதிகளில் அதிமுகவிடம் கவுண்டர் வாக்குகளும், திமுகவிடம் முஸ்லிம் வாக்குகளும் உறுதியாக உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் பிராமணர்கள் மிகவும் உறுதியான மற்றும் நம்பகமான வாக்காளர் தொகுதியாக இருந்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற சமூகங்களைச் சேர்ந்த இந்துத்துவா ஆதரவாளர்களை ஒருங்கிணைப்பதற்கான முக்கிய தூணாக பிராமணர்கள் உள்ளனர் என்றும், அவர்களின் ஆதரவை இழப்பது பாஜகவுக்கு நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் நடிகர் விஜய்யின் கட்சியும், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிவும் பிராமண வேட்பாளர்களை நிறுத்துவதால் களநிலை மாறி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி ஒரு முக்கிய சோதனையாக இருக்கும் என்றும், தீர்மானிக்கும் வாக்குப் பங்கைப் பெறும் கட்சிகள் எதிர்கால தேர்தல்களுக்கு பெரிய அரசியல் சிக்னல் அனுப்பும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் பிராமண வாக்குகளை புறக்கணிக்கும் எந்தக் கட்சியும், அதன் தாக்கம் மற்ற மாநிலங்களிலும் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கஸ்தூரி எச்சரித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ