Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 மார்ச் (ஹி.ச.)
ஜாய் கிரிசில்டாவிற்கு பிறந்த ஆண் குழந்தை தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என்பது டி.என்.ஏ பரிசோதனையில் உறுதியானது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நடந்த டிஎன்ஏ பரிசோதனை முடிவில் வெளியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக மோசடி செய்து ஏமாற்றியதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
மாநில மகளிர் ஆணையமும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பித்தது.
தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதை மறைத்து, ரங்கராஜ் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக ஜாய் கிரிசில்டா குற்றம் சாட்டினார்.
தங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கப்போவதாகவும், அதற்கு ரங்கராஜ் பொறுப்பேற்க மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவினர் ரங்கராஜை விசாரணைக்கு அழைத்தனர்.
மேலும் மாநில மகளிர் ஆணையத்திலும் இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன
இந்நிலையில்
மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸல்டா எதிராக இரண்டு வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் அதில் தன்னை பற்றி சமூக விடுதலத்தில் பேசவோ அவதூறு செய்வோம் கூடாது என்பது குறித்து வழக்கு தொடர்ந்தார்.
மேலும் தனது நிறுவனத்திற்கு 12 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு போடப்பட்ட வழக்கும் தொடர்ந்தார்
இவர்கள் இருவர் தொடர்பாக மத்தியஸ்தம் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி பி என் பிரகாஷ் நியமிக்கப்பட்டார் மேலும் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அடிப்படையாக வைத்து மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசல்டா அவர் பெற்ற ஆண் குழந்தை ஆகியோருக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்பட்டது அது தொடர்பான முடிவுகள் இன்று சீலிடப்பட்ட கவரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது.
இந்த முடிவுகள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது
ஆலம்பட்டி ரங்கராஜ் ஜாகிர்சில்டா மற்றும் அவரது ஆண் குழந்தை தொடர்பான டிஎன்ஏ பரிசோதனையில்
மேற்கண்ட மாதிரிகளின் DNA வகைப்படுத்தல் முடிவுகளிலிருந்து, ஒத்த இரட்டையர்கள் இல்லாத நிலையில், ரங்கராஜ் தங்கவேல் என்பவர் ஆண் குழந்தையான ராகா ரங்கராஜின் உயிரியல் தந்தை ஆவார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக ஜூன் மாதம் 8 ஆம் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ