ஆயுதப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி - சத்தீஸ்கர் கான்கேரில் மாவோயிஸ்டுகள் சரண்
கான்கேர், 31 மார்ச் (ஹி.ச.) சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில், மாவோயிஸ்ட் இயக்கத்திலிருந்து விலகி சரணடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் மொத்தம் 11 மாவோயிஸ்டுகள் வன்முறையைத் துறந்து, சமூகத்தின் பொதுநீரோட்ட வாழ்க்கை
ஆயுதப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி - சத்தீஸ்கர் கான்கேரில் மாவோயிஸ்டுகள் சரண்


கான்கேர், 31 மார்ச் (ஹி.ச.)

சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில், மாவோயிஸ்ட் இயக்கத்திலிருந்து விலகி சரணடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த ஒரு வாரத்தில் மொத்தம் 11 மாவோயிஸ்டுகள் வன்முறையைத் துறந்து, சமூகத்தின் பொதுநீரோட்ட வாழ்க்கையில் இணையத் தீர்மானித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று மேலும் இரண்டு மாவோயிஸ்டுகள் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

சரணடைந்தவர்கள் சங்கர் மற்றும் ஹித்மா டோடி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சரணடையும் போது அவர்கள் பயன்படுத்திய AK-47 துப்பாக்கியையும் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

அப்பகுதியில் இன்னும் செயல்பட்டு வரும் மாவோயிஸ்ட் உறுப்பினர்களையும் தொடர்புகொண்டு, அவர்கள் ஆயுதங்களை கைவிட்டு சமூக வாழ்வில் இணையுமாறு சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.

பஸ்தர் காவல்துறைத் தலைவர் சுந்தர்ராஜ் பட்லிங்கம், அண்மையில் சரணடைந்த 11 பேரின் முடிவை வரவேற்று, மீதமுள்ள மாவோயிஸ்டுகளும் வன்முறையைத் துறந்து பொதுவாழ்வில் இணைய வேண்டும் என மீண்டும் அழைப்பு விடுத்தார்.

மேலும், எஞ்சியுள்ள உறுப்பினர்கள் சரணடைந்து மறுவாழ்வு பெறுவதற்கான வாய்ப்பு இன்னும் குறுகிய காலத்திற்குள் உள்ளதாகவும், அவர்கள் விவேகமான முடிவெடுத்து அமைதியான மற்றும் கண்ணியமான வாழ்க்கையைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மார்ச் 25 முதல் சரணடையத் தீர்மானித்த இந்த 11 மாவோயிஸ்டுகளுக்கான மறுவாழ்வு மற்றும் சமூக ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள், தேவையான அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்த பின் முழுமையாக அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM