தனக்கு சீட் தரவில்லை என்று மதிமுக தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா
சென்னை, 31 மார்ச் (ஹி.ச.) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் முக்கிய நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ள சம்பவம் கட்சியில் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. மதிமுக தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் கழக. குமார் உள்ளிட்ட பல நிர்வாகிகள் தங்களத
Vaiko


சென்னை, 31 மார்ச் (ஹி.ச.)

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் முக்கிய நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ள சம்பவம் கட்சியில் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.

மதிமுக தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் கழக. குமார் உள்ளிட்ட பல நிர்வாகிகள் தங்களது கட்சிப் பொறுப்புகளிலிருந்து ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 32 ஆண்டுகளாக கட்சியில் இருந்து பணியாற்றி வந்த நிலையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏ சீட் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாகவும், பின்னர் அது நிறைவேற்றப்படாததால் அதிருப்தி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மீது கடும் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ள மாவட்ட நிர்வாகிகள், தங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி காப்பாற்றப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

நீண்டகாலமாக கட்சிக்காக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்சென்னை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பல நிர்வாகிகள் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்திருப்பது, தேர்தலை முன்னிட்டு மதிமுகவில் உள்ளக அதிருப்தி அதிகரித்துள்ளதைக் காட்டுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்த ராஜினாமா நடவடிக்கை கட்சியின் அமைப்பு வலிமையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு கூட்டணி அரசியல் மற்றும் வேட்பாளர் தேர்வு விவகாரங்களில் புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ