Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 31 மார்ச் (ஹி.ச.)
பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஷீத்லா மாதா கோயிலில் நேற்று நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) ரூ. 2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படவுள்ளதாகவும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படவுள்ளதாகவும் பிரதமர் அறிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 8 ஆக உயர்ந்துள்ளது.
நாலந்தா மாவட்டம், பாட்னா மற்றும் நவாடா மாவட்ட காவல் தலைவர்கள், மண்டல ஐ.ஜி. ஜிதேந்திர ராணா உள்ளிட்ட உயர்தர அதிகாரிகள் இன்று கோயிலுக்கு நேரில் வந்து நிலவரத்தை ஆய்வு செய்தனர்.
கோயில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சம்பவத்தைக் பதிவு செய்த கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகள் தற்போது விசாரணைக்காக பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
திப்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
அதிக வெப்பநிலை காரணமாக இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b