அய்யா வைகுண்டரின் பொன்மொழிகளைப் பின்பற்றி சமத்துவம் பேணுவோம்! -முதல்வர் மு. க.ஸ்டாலின்
தமிழ்நாடு, 04 மார்ச் (ஹி.ச.) அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில், குறிப்பிடபட்டுள்ளதாவது: இடுப்பில் இருந்த துண்டைத் தலைக்குக் கிரீடமாக மாற்றிய அய்யா வைகுண்டரை நாம் பெற்ற
ஸ்டாலின்


தமிழ்நாடு, 04 மார்ச் (ஹி.ச.)

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

அதில், குறிப்பிடபட்டுள்ளதாவது:

இடுப்பில் இருந்த துண்டைத் தலைக்குக் கிரீடமாக மாற்றிய அய்யா வைகுண்டரை நாம் பெற்ற நாள்!

கீழ் நோக்கிப் பிடித்தாலும், மேல் நோக்கியே எரியும் தீபத்தைப்போல, விளக்கின் ஒளியாய், வீரத் தனமாக இருங்கள் எனச் சமத்துவக் கனலைச் சமூகத்தில் விதைத்து நிறைந்தவர் அய்யா வைகுண்டர்.

'தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்' எனும் அவரது கூற்றையே ஆட்சிக்கான அடிப்படையாய்க் கொண்டு நலிந்தோரின் நலம் நாடும் அரசாக நமது திராவிட மாடல் அரசும் செயல்படுகிறது.

அய்யா வைகுண்டரின் பொன்மொழிகளைப் பின்பற்றி நடப்போம்! சமத்துவம் பேணுவோம்!

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam