Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 06 மார்ச் (ஹி.ச.)
சட்டமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது, எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தேர்தல் பொறுப்பாளர் அஞ்சலி நிம்பல்கர் ஆகியோர் தலைமையில் புதுச்சேரியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று தங்களின் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.
புதுச்சேரி தேர்தலில் கடந்த முறை காங்கிரஸ் 15 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் மீண்டும் அதே 15 தொகுதிகள் மற்றும் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதாவது மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் 18 இடங்களும், திமுகவும் 18 இடங்களும் கேட்பதால் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. மேலும் புதுச்சேரியில் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை ஏற்க வேண்டுமென நிர்வாகிகள் கூட்டத்தில் கருத்துக்களை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கிரிஷ் சோடங்கர்,
தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
புதுச்சேரியில் காங்கிரஸ் தான் தலைமை தாங்கும். தமிழகம் போல பேசி முடிவெடுப்போம். சென்னையில் பேசி விட்டோம், அடுத்த கட்டமாக 7 பேர் கொண்ட குழு இங்கு பேச்சு வார்த்தை நடக்கும்.
தேர்தலுக்கு பிறகு வெற்றி பெற்றவர்கள் யார் முதலமைச்சர் வேட்பாளர் என தெரிவிப்போம்.
கூட்டணியில் இருந்தால் கட்சிகள் சில தியாகங்கள் செய்ய முடியும். அதன்படி செய்துள்ளோம். அவர்களும் இங்கு தியாகம் செய்வார்கள் என்று கூறினார்.
Hindusthan Samachar / ANANDHAN