இன்று (மார்ச் 7) அலெக்சாண்டர் கிரகாம் பெல் தினம்
சென்னை, 07 மார்ச் (ஹி.ச.) அலெக்சாண்டர் கிரகாம் பெல் தினம் ஆண்டுதோறும் மார்ச் 7 அன்று கொண்டாடப்படுகிறது. 1876-ஆம் ஆண்டு இதே நாளில் தான் அவர் தனது புரட்சிகரமான கண்டுபிடிப்பான தொலைபேசிக்கான முதல் காப்புரிமையைப் பெற்றார். வாழ்க்கை வரலாறு: பிறப்பு -
இன்று (மார்ச் 7) அலெக்சாண்டர் கிரகாம் பெல் தினம்


சென்னை, 07 மார்ச் (ஹி.ச.)

அலெக்சாண்டர் கிரகாம் பெல் தினம் ஆண்டுதோறும் மார்ச் 7 அன்று கொண்டாடப்படுகிறது.

1876-ஆம் ஆண்டு இதே நாளில் தான் அவர் தனது புரட்சிகரமான கண்டுபிடிப்பான தொலைபேசிக்கான முதல் காப்புரிமையைப் பெற்றார்.

வாழ்க்கை வரலாறு:

பிறப்பு - மார்ச் 3, 1847-இல் ஸ்காட்லாந்தில் பிறந்தார்.

கல்வி - எடின்பரோ பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் பயின்றார்.

குடும்பம் - அவரது தாயார் மற்றும் மனைவி இருவருமே காது கேளாதவர்கள். இதுவே ஒலி மற்றும் பேச்சு தொடர்பான ஆய்வுகளில் அவர் ஈடுபட முக்கிய தூண்டுகோலாக இருந்தது.

முக்கிய கண்டுபிடிப்புகள்:

தொலைபேசி - 1876-இல் உலகின் முதல் செயல்பாட்டுத் தொலைபேசியை உருவாக்கினார்.

முதல் அழைப்பு - மார்ச் 10, 1876-இல் தனது உதவியாளர் வாட்சனை நோக்கி, வாட்சன் இங்கே வாருங்கள், உங்களைக் காண வேண்டும் என்று பேசியதே உலகின் முதல் தொலைபேசி உரையாடல் ஆகும்.

பிற கண்டுபிடிப்புகள் - போடோபோன் (ஒளியைப் பயன்படுத்தி ஒலியை அனுப்புதல்), மெட்டல் டிடெக்டர் (உலோகத்தைக் கண்டறியும் கருவி) மற்றும் ஆடியோமீட்டர் போன்ற பல கருவிகளைக் கண்டுபிடித்தார்.

சமூகப் பங்களிப்பு:

காது கேளாதோருக்கான பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றினார். புகழ்பெற்ற ஹெலன் கெல்லர் கல்வி பெற இவரே முக்கிய வழிகாட்டியாக இருந்தார்.

சுமார் 18 தனிப்பட்ட காப்புரிமைகளையும், மற்றவர்களுடன் இணைந்து 12 காப்புரிமைகளையும் பெற்றிருந்தார்.

அலெக்சாண்டர் கிரகாம் பெல் 1922-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதி இயற்கை எய்தினார்.

அவர் மறைந்த போது, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமெரிக்காவில் உள்ள அனைத்துத் தொலைபேசி சேவைகளும் ஒரு நிமிடம் நிறுத்தப்பட்டன.

Hindusthan Samachar / JANAKI RAM