Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 07 மார்ச் (ஹி.ச.)
திண்டுக்கல்லை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜ்.
இவர் ஸ்பென்சனர் காம்பவுண்ட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த கிழக்கு கக்கன் நகரை சேர்ந்த முருகேசன் மகன் தமிழ்செல்வன்(24) என்பவர் உடைந்த பீர் பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி பணம் பறிக்க முயற்சி செய்துள்ளார்.
இது குறித்து,ராஜ் அளித்த புகாரின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர்கள் சரத்குமார், பிரபாகரன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் தீவிர விசாரணை மேற் கொண்டனர்.
விசாரணையில், இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட தமிழ் செல்வனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam