Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஏப்ரல் (ஹி.ச.)
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள தேமுதிக 10 தொகுதிகளுக்கான தேமுதிக வேட்பாளர்கள அறிவித்து உள்ளது.
அதில் விருத்தாசலம் - பிரேமலதா விஜயகாந்த்
விருதுநகர் - விஜய பிரபாகரன்;
தருமபுரி- இளங்கோவன்; குடியாத்தம் (தனி) - கே.பி.பிரதாப்;
சேலம் மேற்கு- அழகாபுரம் மோகன்ராஜ்;
போளூர் - டி.பி.சவரணன் ; பல்லாவரம் - அனகை முருகேசன்;
திருத்தணி - டி.கிருஷ்ணமூர்த்தி,
ஓமலூர் - ஏ.ஆர்.இளங்கோவன் மைலம் - எல்.வெங்கடசன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இந்நிலையில் வேட்பு மனுதாக்கல் செய்ய நான்கு நாட்களில் ஏற்கனவே 31 தேதி முடிவடைந்துள்ள நிலையில் கடைசி நாளாக 6 ம் தேதி தேமுதிக வேட்பாளர்கள் அனைவரும் வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.
ஏப்ரல் 5 தேதி விருதாச்சலம் செல்லும் பிரேமலதா அடுத்த நாள் அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ