வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா - கேரள மக்களைத் தவறாக வழிநடத்துவதாக காங்கிரஸ்–சிபிஎம் மீது கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு
புதுடெல்லி, 01 ஏப்ரல் (ஹி.ச.) வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026 குறித்து கேரள மக்களைத் தவறாக வழிநடத்துவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று குற்றம் சாட்ட
வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா - கேரள மக்களைத் தவறாக வழிநடத்துவதாக காங்கிரஸ்–சிபிஎம் மீது கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு


புதுடெல்லி, 01 ஏப்ரல் (ஹி.ச.)

வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026 குறித்து கேரள மக்களைத் தவறாக வழிநடத்துவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று குற்றம் சாட்டினார்.

வெளிநாட்டுப் பங்களிப்பு திருத்த மசோதாவைச் சுற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன எனக் கூறிய அவர், இந்த மசோதா எந்த மதத்தையோ அமைப்பையோ குறிவைத்ததல்ல என்றும், தேசிய நலனை முன்னிறுத்தி வெளிநாட்டு நிதியுதவிகளை ஒழுங்குபடுத்துவதே இதன் நோக்கம் என்றும் விளக்கினார்.

இது குறித்து மக்களவையில் பேசிய கிரண் ரிஜிஜு்,

இந்த திருத்தம் வெளிநாட்டுப் பங்களிப்புகளை ஒழுங்குபடுத்தவும், தேசிய நலன் மற்றும் பாதுகாப்பு கருதி அவை முறையாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவும், நிதி தவறான பயன்பாட்டைத் தடுக்கவும் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது எந்த மதத்திற்கும் அல்லது அமைப்பிற்கும் எதிரானது அல்ல.

தேர்தல் நோக்கில் அவையையோ அல்லது கேரள மக்களையோ தவறாக வழிநடத்தக் கூடாது.

என்று வலியுறுத்தினார்.

வெளிநாட்டுப் பங்களிப்பு திருத்த மசோதா, 2026, மார்ச் 25 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 2010 ஆம் ஆண்டின் வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தில் மாற்றங்கள் செய்து, இந்தியாவில் பெறப்படும் வெளிநாட்டு நிதியின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதற்கு முன், எதிர்க்கட்சிகள் சிறுபான்மையினரை ஓரங்கட்டுகின்றன என்றும், அவர்களை வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கின்றன என்றும் பாஜக எம்.பி. குலாம் அலி கட்டானா குற்றம் சாட்டினார். அதே வேளை, சட்டப்படி செயல்படுபவர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு என்றும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சியினரின் அமளி காரணமாக மக்களவை நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

Hindusthan Samachar / JANAKI RAM