Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஏப்ரல் (ஹி.ச.)
தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் சட்டவிரோதமாக விநியோகிக்கப்படுவதைத் தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மதுரை சேர்ந்த கே. கே. ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது தொடர்ந்து நடைபெற்று வருவதால் அதைத் தடுக்க இந்திய தேர்தல் ஆணையம்க்கு உரிய உத்தரவு வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட விளக்கத்தில், பணப்பட்டுவாடாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 2,169 பறக்கும் படைகளும், 2,166 கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருவதாகவும் ஆணையம் தெரிவித்தது.
மேலும், பணப்பட்டுவாடாவை தடுக்க தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது என்றும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
இந்த விளக்கங்களை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, தேர்தல் ஆணையம் ஏற்கனவே தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Hindusthan Samachar / P YUVARAJ