Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 10 ஏப்ரல் (ஹி.ச.)
திருப்பூர் கே.வி.ஆர் நகர் பகுதியில் வசித்து வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வடிவேலு (33) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், குழந்தைகள் மீது நடைபெறும் பாலியல் குற்றங்களைத் தடுக்கும் போக்சோ சட்டம் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் அனைத்து ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளை ஆய்வு செய்த நீதிமன்றம், குற்றம் நிரூபிக்கப்பட்டதாகத் தீர்மானித்தது.
இதையடுத்து, நீதிபதி கோகிலா முன்னிலையில் நடைபெற்ற இறுதி விசாரணையின் முடிவில், குற்றவாளி வடிவேலுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பு, சிறார்களுக்கு எதிரான குற்றங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கான ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
மேலும், இத்தகைய குற்றங்களை தடுப்பதில் சட்டம் தீவிரமாக செயல்படுகிறது என்பதையும் இந்த தீர்ப்பு வெளிப்படுத்துகிறது.
Hindusthan Samachar / ANANDHAN